Tuesday, November 28, 2017

ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் Rudraksha useful tips






வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான்ருத்ராட்சம்இதற்கு தனித்துவமான சிறப்புகள் பலஉண்டுதன்னைச் சுற்றிலும் அபூர்வமானஅதிர்வலைகளை இது கொண்டிருக்கிறதுஎனவேஇதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும்அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால்உங்களால் அமைதியாக இருக்க முடியாதுஆனால்இருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மைதீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும்.சக்திவட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும்.
ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம்தரும்ஆண்பெண் பேதமின்றி எல்லோரும்அணியலாம்இது ரத்த அழுத்தத்தை சீராக்கிஇமனஅமைதியையும்இ சுறுசுறுப்பையும் தரும்ஆறுமுகம்கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்டகுழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்குபாத்திரமாகலாம்
எப்படி ருத்திராட்சம் தோன்றியது ?
ருத்திரன் என்ற பெயரில் இருந்து வந்ததே ருத்திராட்சம்ஆகும்சிவபெருமானின் முக்கண்களிலிருந்தும்தெறித்த ஆனந்தக் கண்ணீர் சொட்டுகளேருத்திராட்சங்களாகினமொத்தம் முப்பத்தெட்டுவிதமான ருத்திராட்சங்கள் தோன்றின.
வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்திராட்சங்கள்பன்னிரண்டும்இ இடது கண்ணில் இருந்து பதினாறுவெண்ணிற ருத்திராட்சங்களும் தோன்றினநெற்றிக்கண்ணிலிருந்து கருப்பு வண்ணத்தில் பத்துருத்திராட்சங்கள் வெளிப்பட்டன.
தோற்றம்
ஒரு முகம் முதல் 16 முகம் வரை கொண்ட பதினாறுவகை ருத்திராட்சங்கள் உண்டுருத்திராட்சத்தின் மேல்உள்ள கோட்டின் எண்ணிக்கையைக் கொண்டுருத்திராட்சம் எத்தனை முகம் கொண்டது என்பதைஅறியலாம்.
சாணைக்கல்லில் உரைத்தால் மஞ்சளாக தங்கம்போல்பிரகாசிப்பதும்இ நல்ல வர்ணமுள்ளதுமானருத்திராட்சம்இ  ண்ணீரில் போட்டால் மூழ்குவதும்இஇரு செப்புத் தகட்டுக்கு இடையில் வைத்து சோதனைசெய்தால் சுற்றக்கூடியது மான ருத்திராட்சம் ஆகியவைமிகவும் விசேஷமானவை.
கழுத்தில் மாலையாக 32 ருத்திராட்சங்களும்இ கைமணிக்கட்டுகளில் 12 ருத்திராட்சங்களும்இ மேல்கையில் பதினாறும்இ மார்பில் நூற்றியெட்டும்தரிக்கலாம். ருத்திராட்ச மாலையின் பெருமை என்றுசொன்னால்
 ஏக முக ருத்திராட்சத்தின் அதி தேவதையாக தத்பரமசிவனைக் கூறுவார்கள்இந்த ஏக முகருத்திராட்சத்தை அணிவதால் சிவபெருமான் ப்ரீத்திஅடைந்து பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
இரண்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை ஸ்ரீகண்டபரமசிவம்இந்த இரண்டு முக ருத்திராட்சத்தைஅணிவதால் சிவசக்தி ப்ரீதி ஏற்பட்டு பசுவைக் கொன்றதோஷம் விலகும்.
மூன்று முக ருத்திராட்சத்தின் அதிதேவதை அக்னிதேவனாகும்இதை அணிவதால் மும்மூர்த்திகளும்சந்தோஷம் அடைகிறார்கள்ஸ்திரீகளுக்குச் செய்ததோஷம் விலகும்.
நான்கு முக ருத்திராட்சத்தின் அதிதேவதைபிரம்மாவாகும்இதை அணிவதால் பிரம்மா ப்ரீதிஅடைவதுடன்இ மனிதர்களுக்கு இழைத்த பாவம்விலகும்.
ஐந்து முக ருத்திராட்சத்தின் அதிதேவதை காலாக்னிருத்ரன்இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம்அடைகிறார்செய்யக்கூடாத செயல் களைச் செய்வதால்உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்திராட்சத்தின் அதிதேவதைசுப்ரமணியராகும்இதை அணிவதால் ஆறுமுகன்சந்தோஷம் அடைவதுடன்இ பிரம்மஹத்தி தோஷம்விலகும்.
ஏழு முக ருத்திராட்சத்தின் அதிதேவதையாகஆதிசேஷன் சொல்லப்படுகிறதுஇதை அணிவதால்சப்தமாதர்கள் சந்தோஷம் அடைவதுடன் களவுதோஷமும் கோபத் தீயும் விலகும்.
எட்டு முக ருத்திராட்சத்தின் அதிதேவதை விநாயகப்பெருமானாகச் சொல்லப்படுகிறதுஇதை அணிவதால்அட்டவித்யேச்வரர் சந்தோஷம் அடைவதுடன்இசெய்யக்கூடாத பாவங்களைச் செய்த தோஷம்விலகுகிறது.
ஒன்பது முக ருத்திராட் சத்தின் அதிதேவதை பைரவர்.இதை அணிவதால் நவதீர்த்தங் களில் குளித்தால்என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்;பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும்விலகும்.
பத்து முக ருத்திராட்சத் தின் அதிதேவதை விஷ்ணு.இதை அணிவதால் அஷ்டதிக் பாலகர்களும் சந்தோஷம்அடைவதாகச் சொல்லப்பட்டுள்ளதுஜோதிடத் தில்வரும் நாக தோஷமும்பூதபிரேதபைசாச தோஷங்களும் விலகும்.
பதினோரு முக ருத்திராட் சத்தின் அதிதேவதைபதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள் ளதுஇதைஅணிவதால் 11 ருத்திரர்களும் ப்ரீதி அடைகிறார்கள்.பல அஸ்வமேத யாகம் செய்த பலன் களும் பலவாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.
பலன்?
ருத்திராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும்அவர்களால் பிறர் அனைவரும் பயன்பெறும்வகையிலும நன்மைகளும் அமையும்.
ருத்திராட்சம் தாம் அணியாவிட்டாலும்இ அப்படிருத்திராட்சம் அணிந்தவருக்குஅன்னமளிப்பவர்களும்இ ருத்திராட்சமரத்தைப்பராமரிக்கிறவர்களும்இ புதிய ருத்திராட்சத்தை தானம்செய்பவர்களும்இ சிவபெருமானுக்கு ருத்திராட்சஆபரணம் அணிவிப்பவர்களும் பல சிறப்புநலன்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.ருத்திராட்சத்தால் ஜபம் செய்கிறவருக்கு அனைத்துமந்திர சித்திகளும் எளிதில் கைவரப்பெறும்.
ஒரு முக ருத்திராட்சம் முதல் பதினாறு முகம்ருத்திராட்சம் வரை அணிவதன் மூலம் பல பலன்களைஅடையலாம்.

குணங்கள்
சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள்வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்குஇஜடாமுடிஇ மண்டை ஓடுஇ ருத்ராஷம்இமிருக தோல்அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள்.
இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்கமுடியாதுசில பொருட்களை உருவாக்கினாலும்செயற்கை என தெரிந்துவிடும்.
செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன்இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடையஅவனுக்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது.இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனதுசுயதன்மையான புருஷ நிலையை அடையமுயற்சிக்கும் பொழுதுஅதிகம் பயன்படுவதும்எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும்இயற்கையானமணிகள் ஆகும்.
ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய்(விதைகனி வடிவம் பெருவதில்லைஅத்தி பூக்காதுவிதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மைகொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்டபகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.
நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில்இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும்நாடாக திகழ்கிறதுஇந்தியாவில் அதிக அளவில்ருத்ராஷம் கிடைப்பதில்லை.
ருத்ராஷத்தின் வடிவம்இ அதில் உள்ள துளைஅனைத்தும் இயற்கையானதுபார்க்கும்பொழுது எந்தவித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும்ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்கமுடியாத ஒன்று.
சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்துஇ ஆன்மீகஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம்என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறுமாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில்வைத்திருப்பவராக மாற்றும்.
ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்தஇவேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும்.தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமானஇயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மைருத்ராம்சம் என அழைக்கப்படும்.
சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம்என்றும் மனதில் கொள்ளவேண்டும்சூரியன் எவ்வாறுதன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தைஉருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல்மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில்வைக்கும் சக்தி கொண்டது.
ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு.சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களைமிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பதுஅறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மைஇதனால்தான்காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின்உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.
ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின்வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள்ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால்உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடுருத்ராக்ஷத்திலும் தெரியும்உங்களின் உடலில்அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாதவேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனதுஇயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும்விஷபொருட்கள்உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்தவிஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனதுவாழ்க்கையை முடித்துக்கொள்ளும்.
ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும்இல்லைகுறிப்பிட்ட ஜாதிஇ மதஇ இன வேறுபாடுகிடையாதுஆண்ஃபெண் என இருவரும்பயன்படுத்தலாம்வயது மற்றும் இதர விசயங்கள்தடையாக இருக்காதுஆனால் ஒழுக்கமும் தூய்மையும்ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.
தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும்பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்புநிலையான தன்மை பாதிக்கப்படுகிறதுமேலும்தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறுபாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதைசெலுத்துவது நல்லது.
குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகுருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவதுநல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷமாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணிஅன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.
மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல்வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்துகொள்ளலாம்இதை தவிர வேறு தன்மையில்ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரணஅணிகலனுக்குச் சமமானதுவேரு விசேஷம் அதில்இல்லை.
ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாகபாதுகாப்பது முக்கியமான ஒன்றுகெமிக்கல்பொருட்கள்இ சோப் மற்றும் இதர செயற்கைப்பொருட்கள் படாமல் பாதுகாக்க வேண்டும்.
பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம்பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்கவேண்டும்பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்துவிட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும்.பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்துநன்றாக துடைத்துக் கொள்ளவும்பின்பு பூஜையில்வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம்இந்ததூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறைசெய்ய வேண்டும்மாத சிவராத்திரி அல்லதுமஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மைவேலையை துவக்க வேண்டும்.
ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலைசெய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா?இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமானவிஷயத்திலிருந்து பார்ப்போம்உங்கள் உடலில்மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதிமட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவுஉணர்வு மயமாக இருக்கும்இதற்கு ஒப்பானதுருத்ராக்ஷத்தின் உணர்வு நிலைஅதனால் தான்மேற்பகுதியை கடினமாக்கவும்இ உணர்வு மிகாமல்சரியான நிலையை அடைய இயற்கையான பொருள்மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.
ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டுஒன்றுமுதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள்கிடைக்கிறதுமுகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல்உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும்ஆரஞ்சு பழத்தைதோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும்இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் எனஅழைக்கிறார்கள்ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்பருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும்அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறதுஎன்றும் கூறுகிறார்கள்உண்மையில் ருத்ராக்ஷத்திற்குபலன் தருவதுஇ செல்வம் கொடுப்பது போன்ற செயல்கிடையாது.நவரத்தின கல் போல இதனையும்வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.
ருத்ரக்ஷத்தை தங்கம்இ தாமிரம் அல்லது பருத்திநூலில் மாலையாக அணிவது நல்லதுநூலில்அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்துஅணிய வேண்டும்ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சிலமுக்கிய செயல்கள் உண்டுஇந்த ஒவ்வொருவகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றானசெயல்களை செய்தாலும்இ சில பிரத்யேககாரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.

1. 
ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்)குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

2. 
ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம்சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும்பிறர் வீட்டில்உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்துபூஜை செய்யலாம்.

3. 
நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலைநயம்இ சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும்.குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்குநான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடைநீங்க வாய்ப்பு உண்டு.

4. 
துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும்பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குஆறுமுக (ஷண்முகிருத்ராட்சம் நல்ல பலனைஅளிக்கும்.

5. 
மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன்பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்சவகையை அணிந்தால் மண வாழ்க்கையில்முன்னேற்றம் உண்டு.
தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விடமணிமாலையாக அணிவது நல்லதுபஞ்சமுகருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம்அரிதுஎனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலைமேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தைஅணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம்.
ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு.இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம்அனைவருக்கும் உண்டுருத்ராக்ஷம் தனக்கெனசிலதனித் தன்மைகளைக் கொண்டதுதாவர வகையாகஇருந்தாலும் நீரில் மூழ்கிவிடும்மரவகைகள் நீரில்மிதப்பதைப் போல மிதக்காதுருத்ராக்ஷத்தில்செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.
ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்புநாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம்விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும்.ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சிலமரவகைகள் உண்டுஇதை” பத்ராட்சம் ” எனஅழைப்பார்கள்இதில் சாயத்தைக் கொடுத்துருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள்தகுந்தபரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.
ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால்முடியும் என்றே கூறலாம்ஒருமுக ருத்ராக்ஷம் முதல்அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள்சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல்அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவைஎந்தகிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின்அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின்மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.
ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும்வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.பத்திரிகையிலும்இ தொலைக்காட்சிகளிலும்விளம்பரம் செய்கிறார்கள்பல கோடி ரூபாய் செல்வம்சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம்செய்கிறார்கள்எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல்முழுவதும் ருத்ராக்ஷம் அணியும் எந்த சிவனடியாரும்கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லைபிறருக்குகோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும்வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை எனசிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும்.
ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது.ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும்.லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்மலஷியத்தை அடையமுடியும்பிறப்பு இறப்பு அற்றநிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்கருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள்.
இறந்த வீட்டிற்கு செல்லும் பொழுது சிலர் அணியகூடாது என சொல்லுவார்கள்ருத்திராட்சத்தை காக்கும்கடவுளாக பார்க்க வேண்டும்எங்கெல்லாம் உங்கள்உடல்இமனம் மற்றும் ஆன்மா தவறான சக்திக்குஆட்படுமோ அங்கெல்லாம் அணியலாம்.
எப்பொழுதும் ஜபம் செய்த மாலையை கழுத்தில்அணிவது நல்லதுஜபிக்கபட்ட மந்திரங்கள் அதில்நிறைந்திருக்கும்உங்கள் அலைபேசியில் சார்ஜ் செய்துவிட்டுஇ வீட்டில் வைத்திருந்தால் என்ன பலன்?
ஜபம் செய்ததும் மாலையை அணிந்தால் அன்றுவித்தியாசமான உள்ளுணர்வு இருப்பதை உணரலாம்.முயற்சித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
ஆன்மீக குருஇ ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்கள் மூலம்மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்ய துவங்கலாம்.ஜபம் செய்யும் மந்திரம்இ மாலை அனைத்தும்அவர்க்ளின் கருத்தாக இருக்கவேண்டும்நாம் முடிவுசெய்ய கூடாது.
இரு முக ருத்திராட்சம் தம்பதிகளுக்கு நல்லது.அதைகாட்டிலும் கெளரிஷங்கர் எனும் வகை உண்டு.அது சிறப்பு வய்ந்தது.
இரவில் அணிய கூடாது என சொல்லுவதற்கு காரணம்.தாம்பத்திய காலத்தில் ருத்திராக்ஷம் அசுத்தமாககூடாது என்பதற்காக தான். உடலுறவு காலத்தில்உடலின் ப்ராண சக்தி அதிகமாக குறைவுஏற்படுவதால்இ அத்தருணத்தில் ருத்திராக்ஷம் செயல்இழக்க வாய்ப்பு உண்டு.
ருத்திரஷத்தை வேறு எந்த பொருளுடனும்இணைக்காமல் தனியே அணிவதே சிறந்தது.ஸ்படிகம்இ முத்துஇ பவளம் என எதையும்பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.
ஒன்றரை அடி உயர அபூர்வ ருத்ராட்சம்!           

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மகேஷ்வரன்ஒன்றரை அடிஉயர ருத்ராட்சத்தை பாதுகாத்து வருகிறார்.
கிருஷ்ணன்கோவில் காயத்ரி தியான பீடத்தை நடத்திவரும்ஸ்ரீவில்லிபுத்தூர் வக்கீல் மகேஸ்வரன்ருத்ராட்சமரம் வளர்க்கிறார்தியான பீடத்திற்கு வந்தவட மாநிலபக்தர்கள்முக்கால் அடிஒரு அடிஒன்றே கால் அடி,ஒன்றரை அடி உயரமுள்ள ஒரு முக ருத்ராட்சங்கள்நான்கை வழங்கினர்.
இதை அவர் பாதுகாத்து வருகிறார்அவர்கூறியதாவது,"" 21 முகம் வரை ருத்ராட்சம் கிடைத்தாலும்,ஒரு முக ருத்ராட்சம் கிடைப்பது அரிதுஇதை வீட்டில்,செம்புபித்தளைவெள்ளி குடங்களில் கண்ணாடிகூண்டில் வைத்து பாதுகாத்து வருகிறேன்மேலும்,கவுரி சங்கரம்திரிவேணி அம்சம்சூரிய கலைசந்திரகலை உள்ளிட்ட வடிவங்களிலும்எட்டு அபூர்வருத்ராட்சங்களும் உள்ளன